“பெண், உழைப்பாளி, குடிமகள் என்கிற மூன்று
நிலைகளில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
பொருளாதாரம் மற்றும் சமூக தளங்களில்
தாராளமயமாக்கல், புதிய வடிவங்களில் ஆன
ஒடுக்குமுறைகளை உருவாக்கி இருக்கிறது.
இது பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்புக்கு
இட்டுச் செல்கிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு
பொருளாதார சுதந்திரமும், சமூக மற்றும் அரசியல்
வாழ்க்கையில் சுதந்திரமான பங்கு பாத்திரமும் அடிப்படை
முன்நிபந்தனைகளாகும். பாகுபாட்டை எதிர்த்து பெண்
சமத்துவத்திற்காக நடத்தப்படும் போராட்டங்கள்,
சமூக விடுதலைக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாகும்”